Friday, July 02, 2010

கேள்விக்குறி...


உன் பிரிவுக்கான காரணம் இன்னும் கிடைக்கவில்லை...
ஏனென்றால் அதன் விடை இன்னும் நானாக இருப்பதால்...
.

Friday, February 26, 2010

இறப்பு...


இந்த உலகத்தில் இருந்து நீ
விடை பெரும் தருணம் அல்ல
நீ விடுதலை அடையும் தருணம்..

அலைகளின் ஓய்விற்கு காத்திருந்தால்
முத்துகளின் முகங்கள் உனக்கு கிடைக்காது...
உன்னால் முடியவில்லை என்று நீ சொல்லும் ஒவ்வொன்றையும்
எவனோ உன்னைப்போல் ஒருவன்தான் செய்கின்றான்..
தோல்விகளும் துக்கங்களும் அனைவர்க்கும் உண்டு
தாங்குவதும் தகர்தெறிவதும் உன்னுடைய வீரம்...
நீ சோர்வடையும் இடத்தையும் சிகரமாய் தேர்ந்தெடு...
நேற்றைய இழப்பினை இன்றில் ஈடு செய்...
இன்றினை உனதாக்கினால்....
நாளை உன் வெற்றி...

இரு விழி நிறைந்து நீ இருந்ததால்தான்
என்னவோ

என்னை
விட்டு நீ பிரிந்த பின்
கண்ணீர்
உள்நிற்க மறுக்கிறது....

முதலும் முடிவும்







எனக்கு அனைத்துமாய் நீ இருந்தாய்
ஆனால் இப்பொழுது நானோ
எதுவுமில்லாமல் இருக்கிறேன்
என்னுடன் நீ இல்லாததால்...

Monday, December 14, 2009

எனது முடிவு..


ஒரு சிறிய ஆரம்பம்...
எனது
முடிவினை எழுதிவிட்டது...
ஆரம்பம் காதலில்...
முடிவு எந்தன் வாழ்வினில்...

Thursday, October 29, 2009

முதுமை...

முதுமை...

உன்னை அறிந்த நீ

மற்றவரை திருத்தும் நேரம்...

Tuesday, October 27, 2009

உலக நியதி....

நீ இந்த உலகில் வாழ வேண்டுமென்றால்...
ஏமாற்ற கற்றுக்கொள்....
இல்லையெனில்...
ஏமாறக் கற்றுக்கொள்....

உழைப்பு....

உனக்கொரு முகவரி வேண்டுமெனில்...
உன் வழியில் செல்...

உலக நாயகன்....


உன்னை வெல்ல எவனும் இல்லை...
உன்னைப்போல் ஒருவன் இனிமேல் இல்லை....
உங்கள் வழியில்... எங்கள் விழிகள்....

உண்மை....

காதல் ....
கண்ணீரின் இருப்பிடம்.....
மௌனங்களின் அலறல்கள்.....
யுத்தங்களின் ஆரம்பம்....
இருப்பினும்....
காதல் அழகானது.....

Sunday, October 11, 2009


கடவுள்...

இல்லை என்று சொல்லி...

இருப்பவர் சிலர்...

இருக்கிறான் என்று சொல்லி ...

வாழ்பவர் சிலர்...

நான்தான் என்று கூறி...

பிழைப்பவர் பலர்...

இதில் யார் கூறுவது உண்மை...???

என்ன நடந்தது....???

நான் அவளை சந்தித்த பொது

நிலவு பகலில் தோன்ற...

அலைகள்அமைதி பாட...

புயலாய் தென்றல் வீச...

கவிதை நூறு எழும்ப....

இவை எதுவும் நடக்கவில்லை....

நான் அவளையும்...அவள் என்னையும் கடந்து செல்ல...

காதல் கண்களுக்குள் பாய்ந்தது...

Saturday, October 10, 2009

கற்பனை...


கற்பனை....

பல கண்டுபிடிகளுக்கும் ...
பல அழிவுகளுக்கும் ...
மூல காரணம்....

காதல்...

காதல் இருக்கும் இடத்தில் எல்லாம்

அதிசயம் உண்டாகும்...

ஆம் நம் மனித இனம் உண்டாக

இருந்த புனித சூத்திரம்...

காதலும் அமைதியும்...



இரு வேறு துருவங்கள்...

அமைதியும் காதலும்...

ஒன்றை ஒன்று சந்தித்துக்கொள்ள

பல யுகங்கள் ஆகும்...

இறைவனின் பரிசு..


தாய்...

எனக்கென இறைவன் கண்டுபுடித்த
அரிய பொக்கிஷம் ...

குழந்தை....

அனைத்தும் தெரிந்து கொள்ள துடிக்கும்
அறியாத மனம்....