Friday, February 26, 2010


அலைகளின் ஓய்விற்கு காத்திருந்தால்
முத்துகளின் முகங்கள் உனக்கு கிடைக்காது...
உன்னால் முடியவில்லை என்று நீ சொல்லும் ஒவ்வொன்றையும்
எவனோ உன்னைப்போல் ஒருவன்தான் செய்கின்றான்..
தோல்விகளும் துக்கங்களும் அனைவர்க்கும் உண்டு
தாங்குவதும் தகர்தெறிவதும் உன்னுடைய வீரம்...
நீ சோர்வடையும் இடத்தையும் சிகரமாய் தேர்ந்தெடு...
நேற்றைய இழப்பினை இன்றில் ஈடு செய்...
இன்றினை உனதாக்கினால்....
நாளை உன் வெற்றி...

No comments:

Post a Comment